பங்குசந்தை ........!!!!!??????
என்றதும் எல்லோருக்கும் ஒருவிதமான மிரட்சி அல்லது புரியாத பயம் . ஆனால் என் அனுபவத்தில் பங்குச்சந்தை மற்ற எல்லா தொழில்களை போல் சந்தர்ப்பங்களும் ஆபத்துகளும் லாபமும் நஷ்டமும் நிறைந்த ஒரு தொழில்தான். எப்படி உங்களுக்கு அறிமுகமில்லாத தொழிலில் காலை வைத்தால் சறுக்கி விடுமோ அதேதான் பங்குசந்தையிலும். சில வருடங்களுக்கு முன் நான் பங்கு வர்த்தகத்தில் நுழைந்த பொழுது எனக்கிருந்த பயமும் திருவிழாவில் தொலைந்த குழந்தையை ஒத்த மன நிலையும் இன்று இல்லை. நான இப்பொழுது சிறிதளவு சந்தை மற்றும் பங்குகளின் போக்கை புரிந்து கொள்ளும் வகையில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளேன். என்னுடைய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலை தளம்.
சரியான திட்டமிடலும் பொறுமையும் இருந்தால் பங்குச்சந்தை நமது பொருளாதார மேம்பாட்டிற்கு ஒரு அருமையான வாய்ப்பு. வாருங்கள் வளம் பெறுங்கள்.
சரியான திட்டமிடலும் பொறுமையும் இருந்தால் பங்குச்சந்தை நமது பொருளாதார மேம்பாட்டிற்கு ஒரு அருமையான வாய்ப்பு. வாருங்கள் வளம் பெறுங்கள்.