பங்குகள் என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம் நீங்கள் 5 லட்சம் முதலீடு செய்து ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள். அதை விரிவு படுத்த உங்களுக்கு மேலும் 5 லட்சம் முதலீடு தேவை படுகிறது. நீங்கள் உங்கள் நண்பரை அணுகுகிறீர்கள். அவர் என்னால் 2 லட்சம் தான் கொடுக்க முடியும் என்கிறார். மேலும் இரு நண்பர்களிடமிருந்து உங்களுக்கு தேவையான மீதி 3 லட்சத்தை நீங்கள் பெற்று கொள்கிறீர்கள். அனைவரையும் பங்குதாரராக சேர்த்துக் கொள்கிறீர்கள்.
இப்பொழுது உங்கள் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகள் கீழ்க்கண்ட வகையில் பிரிந்து இருக்கும்
நீங்கள் - முதலீடு - 5 லட்சம் பங்கு 50%
நண்பர் 1 - முதலீடு - 2 லட்சம் பங்கு 20%
நண்பர் 2 - முதலீடு - 2 லட்சம் பங்கு 20%
நண்பர் 3 - முதலீடு - 1 லட்சம் பங்கு 10%
உங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களின் எண்ணிக்கை 4 . வருட இறுதியில் நீங்கள் உங்கள் நிறுவனம் ஈட்டும் லாபத்தை உங்கள் முதலீட்டுக்கேற்ற விகிதத்தில் பிரித்து கொள்கிறீர்கள் .
இவ்வகையில் ஒரு நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்யும் நபருக்கு தன் நிறுவனத்தின் உரிமையை கொடுப்பது பங்கு ஆகும்.
ஆரம்பத்தில் பங்குகளை பேப்பர் வடிவத்தில் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் இருந்தது. நாளடைவில் அதில் இருந்த நிர்வாக சிக்கல்கள் மற்றும் கணணி துறையின் அசுர வளர்ச்சி இவை இரண்டும் சேர்ந்து பங்குகள் பரிமாறிக்கொள்ளும் வழக்கத்தில் ஒரு பெரிய மறுதலை ஏற்படுத்தியது.
தற்பொழுது நிறுவனத்தின் பங்குகள் கணணி மூலமே இணையத்தில் பரிமாறிக்கொள்ள படுகிறது. உங்களிடமுள்ள பங்குகள் உங்களுடைய டீமாட் அக்கௌண்டில் ( deemat account ) இருப்பு வைத்து கொள்ளப்படும். அது என்ன டீமாட் அக்கௌன்ட் அது வரும் பதிவுகளில் பார்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக